உலகக் கிண்ணத் தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்

காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாதிருந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா உலகக் கிண்ணத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட வில்லை. இந்நிலையில், ஐசிசி உலகக் கிண்ணத் தொடரில் இருந்து அவர் தற்போது முழுமையாக விலகியுள்ளார்.

இந்தியாவுக்காக 17 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடிய பிரசித் கிருஷ்ணாவை அவருக்குப் பதிலாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரசித் கிருஷ்ணா 33 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதாலும் அணி அரையிறுதிக்கு முன்னேறியதன் காரணமாகவும் பிரசித் கிருஷ்ணா பதினொருவர் கொண்ட அணியில் இடம் பெறுவது சந்தேகத்திற்குரியது.

இந்தியா 14 புள்ளிகளுடன் 10 அணிகள் கொண்ட பட்டியலில் முன்னணியில் உள்ளது மற்றும் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஹர்திக் பாண்டியா
Comments (0)
Add Comment