அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த புயல்

இன்று(17) அர்ஜென்டினாவின் பஹியா பிளாங்கா நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த புயலால் அங்குள்ள விளையாட்டுக் கழகத்தின் மேற்கூரை இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நகரத்தில் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் எதிரொலியால், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாஹியா பிளாங்காவைத் தாக்கிய கனமழை மற்றும் காற்று, ஸ்கேட்டிங் போட்டி நடைபெறும் மைதானத்தின் மேற்கூரையை வீழ்த்தியுள்ளது.

மேலும், இடிபாடுகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ன.

அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த புயல்
Comments (0)
Add Comment