தமிழ் ஓசை
தமிழ் ஓசை

காஸாவில் இருந்து பொதுமக்கள் வௌியேற அனுமதி

0 69

இஸ்ரேலின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள காஸாவில் இருந்து பொதுமக்கள் வௌியேற முதன்முறையாக நேற்று (01) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டினர், காயமடைந்தோா் மட்டும் காஸாவில் இருந்து எகிப்து செல்ல குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
 
காஸாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரும் காயமடைந்துள்ள பாலஸ்தீனா்களும் ராஃபா நகர எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்டுள்ள 320 போ் ராஃபா எல்லை வழியாக எகிப்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

அவா்களைத் தவிர, காயமடைந்துள்ள மேலும் 76 போ் எகிப்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அவசரகால ஊா்திகள் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனா்.

முதல் கட்டமாக வெளிநாட்டினா் மற்றும் இரட்டை குடியுரிமையுள்ள 500 பேரை எகிப்துக்குள் அனுமதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வெளியேற்றம் இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் நோக்கில் காஸா மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த 26 நாட்களாக தீவிர குண்டுவீச்சு நடத்தி வருகிறது. இதில் ஏராளமான வெளிநாட்டினரும் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.