தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடத்தப்பட்ட 13 குழந்தைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

0 70

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக பிற நாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குடிவரவுத் திணைக்களம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் அவசர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இன்று (27) காலை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்தியதில் இடைத்தரகர்களுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் 75 லட்சம் ரூபாயை வழங்கியது முன்னதாக தெரியவந்தது.

நீண்ட கால விசாரணையின் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13 ஆக உள்ளது

Leave A Reply

Your email address will not be published.