Developed by - Tamilosai
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
கிரிக்கெட்டின் பொறுப்பு பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இன்றைய அதிகாரிகள் மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகள் சுயாதீனமாக நிர்வகிக்கப்படாமை, அதன் நிர்வாக செயற்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீடுகள் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.