Developed by - Tamilosai
2023 world cup: இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி அருகே துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார். பொறியியலாளரான இவர் தன்னுடைய வீட்டில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்தார். கப்பு நமக்குதான் என பல ரசிகர்கள் உறுதியாக நம்பியதை போல ஜோதிகுமாரும் ஆர்வத்துடன் போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார். போட்டியின் போக்கு மாற மாற வேதனையில் காணப்பட்ட ஜோதிகுமாருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
பதறியடித்த குடும்பத்தினர் உடனடியாக அவரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோதிகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.