Developed by - Tamilosai
ஹொரவப்பொத்தான, ஹொரவெவ பகுதியில் வயல்வௌி ஒன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக்டர் ஒன்றில் இருந்த சிறுவன் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
துட்டுவெவ பகுதியை சேர்ந்த 14 வயதுச்சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.