Developed by - Tamilosai
குண்டசாலை – தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடை ஒன்று சேதமடைந்துள்ளது.
அத்துடன் மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.