Developed by - Tamilosai
கொழும்பின் சில பகுதிகளில் இரவு 7 மணி முதல் நாளை காலை 5 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே குறித்த 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பு மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளே நீர் வெட்டுக்கு காரணம் என நீர்வள சபை மேலும் தெரிவித்துள்ளது.