Developed by - Tamilosai
ஆசியக் கிண்ண தொடரின் முதல் போட்டி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதுகின்றன.
பாகிஸ்தானின் முல்தானில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தானி அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
இதன்படி, அந்த அணி சற்று முன்னர் வரை 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதேவேளை, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து இந்த தொடரை நடத்துகின்றன.
அதன்படி, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் விளையாடவுள்ளன.
இந்த தொடரின் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், இந்திய-பாகிஸ்தான் போட்டி மற்றும் இறுதிப் போட்டி உட்பட ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.
முதலாவது போட்டி பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் பகல்-இரவு போட்டியாக இன்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.