Developed by - Tamilosai
கானாவில் நடைபெற்ற 4ஆவது மிஸ் டீன் சுற்றுலா (Miss Teen Tourism ) போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய செல்வி. நெலுனி சௌந்தர்யா, இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தார்.
20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியானது கானாவின் அக்ரா நகரில் கடந்த முதலாம் திகதி முதல் 20 ஆம் வரை நடைபெற்றது.
குறித்த போட்டியில் இலங்கை வென்றது இதுவே முதன்முறையாகும்.
வெற்றி பெற்ற நெலுனி சௌந்தர்யாவை வரவேற்பதற்காக நெக்ஸ்ட் ஈவென்ட் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்யூட்டின் தேசியப் பணிப்பாளர் சரித் குணசேகர, மற்றும் அந்நிறுவன ஊழியர்கள்,மேலும் சௌந்தர்யாவின் பெற்றோர் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.