Developed by - Tamilosai
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் சபை ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10 லீக்கின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட வீரர்களில் இலங்கையின் முன்னாள் முதல்தர வீரரான சாலிய சமந்தாவும் இடம்பெற்றுள்ளார்.