நாடு திரும்பிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு (22) மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூது குழு தனது சுற்று பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைரணில் விக்ரமசிங்க
Comments (0)
Add Comment