தமிழ் ஓசை
தமிழ் ஓசை

440 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் பறிமுதல்

0 97

கடற்படையினரால் நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 440 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 29 ஆம் திகதியன்று நீர்கொழும்பு, பிடிபன தடாகம் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகினை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது, பிடிபன தடாகம் பகுதியினூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 440 கிலோ 900 கிராம் பீடி இலைகள் மற்றும் படகொன்றினையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் படகினை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.