தமிழ் ஓசை
தமிழ் ஓசை

14 சடலங்களுடன் ஒருவர் கைது

0 108

ருவாண்டா நாட்டில் உள்ள நபர் ஒருவரின்  வீட்டின் சமையலறையில் இருந்து 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. 34 வயதுடைய குறித்த  சந்தேக நபர், இரவு விருந்தில் சந்திக்கும் நபர்களை தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

பின்னர் அவர்களை கொலை செய்து வீட்டின் சமையலறையில் குழி தோண்டி புதைத்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் கொள்ளை, பாலியல் பலாத்காரக்  குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட அவர்,  பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அடுத்து, அவரின் வீட்டில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.