தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வேலையின்றி கட்டாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள்

0 90

கட்டாருக்கு வேலைக்குச் சென்று தொழில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இரண்டு இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 11 இளைஞர்கள் நாடு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு திரும்பியுள்ள இரு இலங்கையர்களும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலை செய்யும் இடத்தின் கடிதமோ அல்லது வேலைவாய்ப்பு ஒப்பந்தக் கடிதமோ இல்லாமல் கட்டாருக்கு பணிக்குச் சென்றுள்ளனர்.

நிகரவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் உள்ளூர் தரகரிடம் தலா 5 இலட்சம் ரூபா பணத்தினை கொடுத்து, ஜூன் மாதம் 17 ஆம் திகதியன்று கட்டாருக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கட்டாரில் தங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் தங்கியிருந்த விடுதியில் மேலும் 11 இலங்கை இளைஞர்கள் வேலையின்றி இருப்பதுடன்,மீண்டும் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் கட்டாரில் சிக்கித்தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.