தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

0 77

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது பெருக்கெடுக்கம் நிலையில் உள்ள நில்வலா கங்கையை அண்மித்துள்ள பகுதிகளில் மேலும் மழை பெய்தால், அது வெள்ள நிலைமையாக உருவாக்கலாம் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் கடும் மழையினால் 12 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்கொழும்பில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், 97 மில்லிமீற்றராக அது பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.