Developed by - Tamilosai
அடுத்த வாரம் நாட்டில் வெங்காயத்தின் விலை குறைவடையும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம். அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மூன்று மாதங்களுக்கு பெரிய வெங்காயத்தை வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அடுத்த வாரத்திற்குள் நாட்டுக்கு தேவையான அளவு வெங்காயம் கிடைத்துவிடும் என்பதால் வெங்காயத்தின் விலை குறைவடையும்” இவ்வாறு தெரிவித்துளள்ளார்.