தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வாகன விபத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

0 91

தம்புள்ளை குருநாகல் பிரதான வீதியின் கலேவெல தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் நேற்று (10) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பெதுருதுடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விடுமுறையில் சென்ற தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதபெதிவெவ பகுதியை சேர்ந்த இருபத்தைந்து வயதுடைய திருமணமாகாத பொலிஸ் கான்ஸ்டபிள் சந்திமா ஜும்னி தில்ருக்ஷி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தம்புள்ளையில் இருந்து கலேவெல நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

கலேவெல பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் தலகிரியாகம விகாரைக்கு அருகில் இரண்டு வாகனங்களுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.