தமிழ் ஓசை
தமிழ் ஓசை

 வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

0 77

500,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர் தியத்தலாவ கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய தயாராகி வருவதாக விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.