Developed by - Tamilosai
தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ரயில் இயந்திர சாரதிகளின் பதவி உயர்வு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் திங்கட்கிழமை அரச சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
பிரச்சினைக்கான தீர்வுகள் விரைவில் வழங்கப்படும் என நம்புவதாக சங்கத்தின் தலைவர் சந்தன வியந்துவா தெரிவித்தார்.