Developed by - Tamilosai
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று வியாழக்கிழமை (16) யாழ்ப்பாண நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று முறிந்து விழுந்தது.
யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் ஆரம்ப பாடசாலைக்கு முன்பாக வீதியோரமாக இருந்த மலைவேம்பு மரமே முறிந்து விழுந்துள்ளது.
பாடசாலை முன்னால் இருந்த நிலையில் மரம் வீதிக்கு குறுக்காக விழாது வெற்றுக் காணிக்குள் விழுந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்