தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மூடப்படும் நிலையில் பேக்கரிகள்!!

0 97

பேக்கரி தொழிலுக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் தொழில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டதன் காரணமாகவே உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பேக்கரி பொருட்களுக்கு உள்ளூர் முட்டைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக, இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை தமது தொழிலுக்காக விடுவிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.