Developed by - Tamilosai
சுகாதாரத்துறையில் தொடர்ந்து 217 மருந்துகளின் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மருந்துகளின் பற்றாக்குறை சற்று முன்னேற்றமடைந்துள்ள போதிலும், எஞ்சியுள்ள இடைவெளியை நிவர்த்தி செய்து, எதிர்வரும் மாதங்களில் முடிந்தவரை குறைப்பதற்கு அமைச்சு முயற்சித்துள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது 14 அத்தியாவசிய மருந்துகள் உட்பட முக்கியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என வைத்தியர் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார்.
மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள சுமார் 1,300 மருந்துகளில், 383 வகையான மருந்துகள் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது.
பற்றாக்குறையில் உள்ள மருந்துகளை விரைவில் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.