Developed by - Tamilosai
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மணசரிவால் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகில் பாறை சரிந்து விழுந்ததில் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவத்தினர் தடைகளை நீக்கி ரயில் சேவைகளை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.