தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

0 63

யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் 24 வயதுடைய உ.உசாந்தன் என்ற இளைஞன் மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்குரிய மின்குமிழைப் பொருத்தும் போதே அவருக்கு மின்சாரம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.

வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.