தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 83

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி வாரியபொல, நிக்கவெரட்டிய, மஹவ, பிங்கிரிய, பல்லம மற்றும் சிலாபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.