Developed by - Tamilosai
கல்யாணி தங்க நுழைவாயில் என்றழைக்கப்படும் புதிய களனி பாலத்தை 03 கட்டங்களின் கீழ் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி, புதிய களனி பாலம் டிசம்பர் 1ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையிலும், டிசம்பர் 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.