தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சாரதிகள் அவதானத்திற்கு !!

0 89

நுவரெலியாவில் கடும் மழையுடன் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து மத்திய மலைநாட்டில் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று (19) ஒரு சில பிரதேசங்களுக்கு காலை முதல் சீரான காலநிலை காணப்பட்டதுடன் பகல் வேளையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

மழையுடன் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை, ரொசல்ல, ஹட்டன் உள்ளிட்ட பிரதேசங்களிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, லிந்துலை, சமர்செட், நானுஓயா ரதல்ல உள்ளிட்ட பிரதேசங்களில் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுவாதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பனிமூட்டம் காணப்படும் பிரதேசங்களில் பயணிக்கும் போது தமக்குரிய பக்கத்தில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் வானக விபத்துக்களை தவிர்த்த கொள்ளலாம் என பொலிஸார் இதன் போது சுட்டிக் காட்டியுள்ளனர்.

பனிமூட்டம் காரணமாக ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகள் உள்ளிட்ட பல வீதிகளில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளன

Leave A Reply

Your email address will not be published.