Developed by - Tamilosai
கலாவெவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக கலாவெவ நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, உல்ஹிட்டிய – ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் ஹோபாரிய, ரத்கிந்த பிரதான வீதியில் உள்ள உல்ஹிட்டிய ஓயாவின் பாலம் மூழ்கியமையினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.