Developed by - Tamilosai
இஸ்ரேலுக்கும்-பலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா பாடசாலைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் அஷ்ரஃப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார்.