Developed by - Tamilosai
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை தொட்டு வருகிறது. இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்தனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மின் இணைப்பை இழந்துள்ளன. மத்திய கீவ், தெற்கு ஒடேசா ஆகியவை கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.