Developed by - Tamilosai
மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் பயணித்த இரு வாகனங்கள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (21) மாலை மன்னார் – தலைமன்னார் பிராதன வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவான பருத்திப் பண்ணையில் இடம் பெற்றுள்ளது.
தலை மன்னார் ஊர்மனையைச் சேர்ந்த லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் பேசாலையில் இருந்து தனது மோட்டர் சைக்கிளில் தனது கிராமமான தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக் கொண்டிருந்த போது வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா சென்ற ஹயஸ் ரக வாகனம் தலைமன்னார் ஊர்மனையிலிருந்து மன்னாருக்கு வந்த போது இரண்டு வாகனங்களும் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற் கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதுண்ட வாகனம் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.