Developed by - Tamilosai
மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவர் 19 கிலோ மாட்டிறைச்சியுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று (24) பிற்பகல் லாகுகல, போகஸ்லந்த பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் லாஹுகல ஆயுதப்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.