தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆற்றில் மீட்கப்பட்ட யானையின் தலை

0 87

வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் யானையொன்றை கொன்று, அதன் தலையை வெட்டி கிரிந்திஓய ஆற்றில் வீசி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையின் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

யானையின் உடலை துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசியுள்ளதுடன், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இதுவரை தமக்கு பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.