Developed by - Tamilosai
நேற்று இரவு அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சந்தேக நபரைப் பிடிக்க பண்டாரதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்