Developed by - Tamilosai
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மனைவிக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோபிடனுக்கு தொற்று இல்லை என பரிசோதனையில் தகவல் தெரியவந்துள்ளது.
அவரது மனைவி ஜில் பிடனுக்கு கொவிட் தொற்று இருந்தபோதிலும், ஜி-20 மாநாட்டின் அட்டவணையின்படி ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியா வருவார். திட்டமிட்டபடி மாநாட்டில் கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வரும் 7ஆம் திகதி பிடன் இந்தியா செல்கிறார். செப்டம்பர் 8 ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு சந்திப்பையும் நடத்துகிறார்.
செப்டம்பர் 9ம் திகதி ஜி-20 மாநாட்டில் ஜோ பிடன் கலந்துகொள்ளவுள்ளார்.