Developed by - Tamilosai
இன்று (24) மன்னார், பாப்பாமோட்டை, முள்ளிக்கண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸாா் மேலும் தெரிவித்தனா்.
உயிரிழந்தவர்கள் இருவரும் மன்னார், நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.