தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மயங்கி விழுந்த நிலையில் ஒருவர் மரணம்

0 90

யாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பஸ்ஸில் சென்றவர் பஸ்ஸிலிருந்து இறங்கிய நிலையில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த மாணிக்கவாசகர் சதீஸ்குமார் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.