தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பெண்ணின் சங்கிலி அறுப்பு

0 115

வவுனியா, குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (2) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா,கு ருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த நபர்களை சிலர் துரத்தி சென்றபோதும் அவர்களை பிடிக்க முயலவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றுமுன்தினம் நெளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த 5 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.