தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீலாப்பொல சந்தியில் முச்சக்கர வண்டியுடன் அரச கெப் வாகனமும் மோதி விபத்து

0 86

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல சந்தியில் வைத்து முச்சக்கர வண்டியுடன் அரச கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் ஒருவர்  படுகாயமடைந்து கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.