Developed by - Tamilosai
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையினால் காட்டுத் தீ அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ அதிகரிப்பு மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது.
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக தோட்டங்களில் அதிகளவான தீப்பரவல்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.