Developed by - Tamilosai
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல டிப்போக்களின் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
தம்புள்ளை, அனுராதபுரம், கெக்கிராவ, ஹொரவ்பொத்தான, பொலன்னறுவை, கெபிதிகொல்லாவ மற்றும் கந்தளாய் ஆகிய டிப்போக்களின் பணியாளர்களே இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஹொரவ்பொத்தான டிப்போவின் பரிசோதகர் ஒருவரை தனியார் பேருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.