தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சிறுவர் இல்லத்திலிருந்து 3 சிறுமிகள் மாயம்

0 103

கம்பஹா பகுதியில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் வசித்து வந்த 16 வயதுடைய 3 சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பில் சிறுவர் இல்ல பாதுகாவலர் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து காணாமல் போன சிறுமிகள் தொடர்பில் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. சிறுமிகளை தேடும் பணியில் கம்பஹா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Leave A Reply

Your email address will not be published.