Developed by - Tamilosai
பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குடிசன மதிப்பீட்டில் தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் லேப்டாப் கணினிகள் பயன்படுத்துவது விசேட அம்சமாகும்.
இதேவேளை இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு 2012 இல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது