தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணொருவரின் சடலம்

0 114

தொம்பே, கிரிதர பகுதியில் உள்ள கடை ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.

மாய வெல்லவாய பகுதியைச் சேர்ந்த கல்யாணி என்ற 33 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.

கடையில் பெண் இறந்து கிடப்பதை கடையின் உரிமையாளர் பார்த்ததுடன் பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததை அடுத்து இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.