Developed by - Tamilosai
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்கினால் சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.