Developed by - Tamilosai
புலத்சிங்கள பகுதியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 69 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
நுகவெல கந்த, பதுரலிய மகுர பகுதியைச் சேர்ந்த சந்திராவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் வீடு ஒன்றில் இடம்பெற்ற பூஜையில் கலந்து கொள்வதற்காக தாயும் மகனும் சென்றுள்ளனர் . பூஜை முடிந்து வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அவரது மூத்த மகன் காயமடைந்து புலத்சிங்கள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.