தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இவ்வாரம் ‘அஸ்வெசும’ முதலாவது கொடுப்பனவு

0 108

சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களுக்கான முதலாவது தவணை கொடுப்பனவு இவ்வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக, சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கான வங்கி கணக்குகளைத் திறக்கும் செயற்பாடு 95 வீதம் நிறைவடைந்துள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளர்களுக்கு அவர்களின் பிரிவுக்கேற்ப மாதாந்தம் 15,000, 8,500, 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதனிடையே, அஸ்வெசும திட்டம் தொடர்பாக கிடைத்துள்ள மேன்முறையீடுகள், ஆட்சேபணைகளை பரிசீலித்த பின்னர், மற்றுமொரு பயனாளர்கள் குழு இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படுமென சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.