Developed by - Tamilosai
கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட திடீரென தீ காற்றில் பரவியதால் அருகிலுள்ளவர்கள் பாதிகக்ப்பட்டுள்ளனர்.
குறித்த இரசாயன புகை காற்றில் பரவியதில் சுமார் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டு ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கந்தானை புனித செபஸ்தியார் கல்லூரி மற்றும் அதன் பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது ஒருவர் உயிரிழந்ததுடன், தீ விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.